Friday 16 August 2013

எச்சில் நீரும் தேன் சுவையாகும்...

எச்சில் நீரும்
தேன் சுவையாகும்
சின்ன இதழ் கடை
சிரிப்பினில் வழிந்து
சொட்டும் துளிகள்
நம்மிதழ் தொடுகையில்...

திக்கும் மழலை
"அம்மா" சொல்கையில்
சொக்கும் பரவசம்
பூ மெத்தை விரிக்கும்...
நட்சத்திரங்கள்
கண்களில் ஜொலிக்கும்...

---கீர்த்தனா---

No comments:

Post a Comment