
தன் சுவாசம் இழக்கையில்...
யாவும் இழந்த நம் யாக்கை
வெறும் கூடாக!
உணர்வுகளின் தடங்கள்
சுடும் தீயாக!
அன்னை மடிக்காய் ஏங்கிப்
பொங்கிய கண்ணீர் ஆறாக
வேதனையின் பிழிதல் சாறாய்
உருகி உருகி நெஞ்சம்
உதிரம் கொட்டியபடி!
இழப்பு அது தன்னுயிர்
ஈந்தவள் போகும் வரையில்
யாதார்த்தமான வெறும் கணக்கு!
பாசாங்கில்லாப் பாசம்
இனி எங்கேயெனப்
பொங்கிக் கதறி அழும்
மனதின் உயிர்த்துடிப்பு
அவள் சுவாசத்தைக்
காற்றில் தேடி அலைந்தபடி..
EN KANAVAR RAVIYIN ANNAI IRAIVANADI SERNTHAAR.. :((
No comments:
Post a Comment