Thursday 14 June 2012

உன் மூச்சுக்காற்றினிலே...


என்னுயிராய்
ஆனவனே...
உன்னுயிர்
கொண்டு
செல்லாதே
முன் ஜென்ம
பந்தமிது.....
என்னிடமே
வந்து விடு

தரையில்
வீழ்ந்த
மீனாய்...
துடிக்கிறதே
இதயமிங்கு

கண்களின்
நீரூற்று...
நீர்வீழ்ச்சி
ஆகுமுன்னே...
ஊடலதை
விடுத்து
கூடலினால்
அணை கட்டு

உன் மூச்சுக்
காற்றினிலே...
எந்தனுயிர்
உயிர்க்கட்டும்

------கீர்த்தனா-----

5 comments:

  1. அழகான வரிகளால் சென்றவனை தானாக வரவைத்து விட்டீர்கள் கீர்த்தனா...அன்புமிக்க ஒருவர் நம்மை பிரிந்தால் வேதனை எவ்வாறு இருக்கும் என்பதை உச்சகட்ட சாயலில் சொல்லி இருக்கிறீர்கள். வந்தவர் மீண்டும் உங்களை பிரியும் எண்ணமே வாராது அவன் இந்த பூவுலகை விட்டும் போகும்வரை...அப்படி ஒரு நயத்தை சேர்த்து உரைத்திருக்கிறீர்கள்...பாராட்டுக்கள்..கீர்த்தனா..

    ReplyDelete
  2. வாருங்கள் கீதா...வரவேற்கிறேன்...

    ReplyDelete
  3. உயிர்ப்பான சொற்கள்.

    ReplyDelete
    Replies
    1. தென்றலின் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி தோழி!

      Delete