Thursday 14 June 2012

நீ இருந்தால் மட்டுமே...


நிர்மலமான வான் பரப்பில் தூவிய
வைரக் கற்களாய் விண்மீன்கள்...
பொன்னிற பஞ்சுப் பொதிக்குள்
தங்கமாய் மின்னும் நிலாமங்கை...

இரவினில் முகிழ் விரித்து...
வாசனை தெளிக்கும் மல்லிப்பூக்கள்
கொடியினிலே நட்சத்திர
ங்ளாய்...
மின்னும் முல்லைப்பூக்கள்!

தென்னோலை உரசல் சலசலப்பில்...
இனிய தென்றல் காற்று....
இத்தனை அழகும்…
என்னருகில் நீ இருந்தால் மட்டுமே...
இரசிக்க தோன்றுகிறது...

----கீர்த்தனா----


No comments:

Post a Comment