Wednesday 13 June 2012

உணர்வாய் எனதன்பின் வலிமை...

அன்பென்னும்                                                                     
ஒரு சொல்லில்
எளிதாக ஏமாறும்...
பேதைப்பெண்ணாய்                                               
நானெனினும்…
பெருமை
அடைகிறேன்
அன்பை
வழங்குவதில்
பெருவள்ளல்
நானென்று....


உன்னிடம் ஏன்
கஞ்சத்தனம்
அதைத்தருவதிலே...
அன்புக்கும்
உண்டோ
அடைக்கும் தாழ்
என சும்மாவோ
சொன்னார்
வள்ளுவர் அன்று ...

என்றோ
ஒருநாள்
உணர்வாய்
எனதன்பின்
வலிமை...
அன்று உன்
மனக்கதவின்
தாழ்திறக்குமென
காத்திருப்புடன்
நான்...
 

------கீர்த்தனா------

No comments:

Post a Comment