Friday 22 June 2012

அன்புத்தோழி…


ஏதோ ஓர் பிணைப்பு…
பார்த்த முதல்
நாளினிலே…
கௌவிப்பிடித்த
பாச உணர்வு…

அன்பு வலைவீசித்
தனக்குள் என்னை
எடுத்துக் கொண்ட
அன்புத்தோழி…
துன்பம் விழுங்கும்
புன்னகை உதடுகள்
அவள் சிறப்பு…

உன் மகிழ்ச்சியை
நீ வைத்துக்கொள்…
துன்பங்களை
என்னிடம் தந்துவிடு
எனும் அவள் பாசம்…
வீழும்போது…
கைகொடுப்பேன்
கலங்காதே என்ற
ஆறுதல் வார்த்தைகள்…

எனக்கே எனக்காய்
அன்பைப்பொழியும்
இனிதான உறவுகளில்…
இன்னோர் உறவாய்
கலந்து விட்டாள்…

என்னுயிர்த்தோழியே
நினைக்கும் தருணம்…
கண்களில் பனிக்கும்
பனித்துளியை…பரிசாய்
உனக்குத்தருகின்றேன்
அன்பாய் அதை நீ
பெற்றுக்கொள்…

எனதினிய அன்புத்தோழியே
நந்தாவிளக்காய் ஒளிவீசி…
இறுதிவரை எனதுகரம்…
பற்றிச்செல்… அன்புக்கும்
அரவணைப்புக்கும்
ஏங்கியே தவிக்கும் உன்
செல்லக்குழந்தை நான்…
-----கீர்த்தனா-----

No comments:

Post a Comment