Thursday 14 June 2012

காயங்கள்












காற்றினில் வந்த
உன் வாய்மொழித்                                                                       
தாக்குதலால்
பெற்ற காயங்கள்
அதிகம் தான்… 

அதிலிருந்து
மீண்டு வர
மறுக்கும் மனது  
நத்தையாய்
சுருண்டு விட…

அதே வலியுடன்
உன் மனதும்
சுருண்டு கிடப்பதை
உணர்கிறேன் நான்...
முடிவுகள் இல்லா
வாழ்க்கைப்பயணம்
முடிவேயில்லாமல்...

----கீர்த்தனா----

No comments:

Post a Comment