Wednesday 6 June 2012

சுடுமுண்மை

துன்பச்சுமையழுத்தி
மூச்சடைக்கும் தருணம்
எனக்கான உறவென்று
நினைந்துருகி…

உணர்வுகளைப் பகிர்ந்து
கொண்டபொழுதினிலே
மெதுவாகப் புரிகிறதோ
எனக்காக உருகுமுள்ளம்
அங்கில்லையெனும்
சுடுமுண்மை…

மீண்டும் வலிகளா?
ஏங்கியே வருந்துகின்றேன்
தாங்கும் சக்திதனை
தொலைத்தபடியே...

--------கீர்த்தனா---------






No comments:

Post a Comment