Friday 8 June 2012

மண்ணுள் புதைந்த ஆத்மாக்கள்

இறைவனின் உறைவிடம்
எம்மூரில் பல கண்டோம்
இறுதியிலே தஞ்சமென
நம்பியே அங்கு சென்றோம்

அந்தோ பரிதாபம்
கடவுளும் அகதியாய்
எங்கேயோ சென்றுவிட்டான்
ஏளனமாய் எமைநோக்கி
இடிபாடுகளின் எச்சங்கள்

படைத்தவனுக்கே இக்கதி
சாமானியர் நமகெக்கதி
பகைவனிடம் நீயுமா
தோற்க வேண்டுமாண்டவா??
விடைதெரியா வினாக்களுடன்
புதைந்தோம்… மண்ணுக்குள்ளே

-------கீர்த்தனா--------

2 comments: