Friday 8 June 2012

காதற்பூ…

சொன்னாய் நீ இதமாகத்
தானிருக்கின்றது உனை
நினைக்கையிலென்று …

சொன்னேன் நான்
வலியாகத்
தானிருக்கின்றது
உனைப் பிரிந்து
செல்கையிலென்று…

சுகமும் வலியும்
இணைத்தே உணர்வினை
மலர்த்தவும் வாடவும்
செய்யும் காதற்பூ…

--------கீர்த்தனா----------

No comments:

Post a Comment