Thursday 14 June 2012

ஒற்றைச்சொல்லால் உணர்வைக்கொன்றவனே














தாயன்பு அறியாதே
குழந்தைப் பிஞ்சுகள்                                       
வெதும்பித்தவித்து
உணர்வுகள் சிதைத்து
வாழும் கொடுமை…

அநாதையென்னும்
ஒற்றைச்சொல்லால்
உணர்வைக் கொன்றவனே
இறைவன் என்பவனே...

அவர் தம் வலியுணர்ந்து
வருந்தும் மனிதன்
உனை விட
உயர்ந்தவனோ?
தாயன்பைப்பறித்தவனே
எந்தன்  பார்வைதனில்
என்றும் நீ கொடியவனே..

தவறாயின் மன்னித்திடு
இறைவா….. ஏனெனில்
வலிகள் கண்டால்
துடித்தெழும்
ரௌத்திரக்காரி  நான்..

 உன்னையும்
கேள்வி கேட்பேன்.
நெற்றிக்கண்ணைத்
திறந்திடினும் 
குற்றம் குற்றமேயென
அறிந்தவன்  நீ  தானே…

-------கீர்த்தனா-------

No comments:

Post a Comment