Wednesday 6 June 2012

கனவுச்சுவை

மான்குட்டியாய்
துள்ளித் திரிகிறேன்...
அதி வேகமாய்
மிதிவண்டி ஓட்டுகிறேன்...
மாமரம் ஏறி
மாங்காய் பறிக்கிறேன்...
அங்குமிங்கும் ஓடியோடி 
வண்ணமலர்களை  இரசிக்கிறேன்...                    

வயல் வெளியில்
குதித்து நடக்கிறேன்..
துள்ளும் மீனை
ஆற்றில் பிடிக்கிறேன்...
பொங்கும் கடலில்
முங்கிக் குளிக்கிறேன்...
வீசும் காற்றைக்  கிழித்துக் கொண்டே
கைகள் விரித்து ஓடுகிறேன்...

ஆஹா...ஆஹா...
சொர்க்கத்தில்பறக்கிறேன்....
வெளியே ஆந்தை அலறும் சத்தம்!!!
திடுக்கென விழிக்கிறேன்...
என் இயங்காத கால்களை
கைகளால் தூக்கி வைத்து
மீண்டும் மறுபக்கம்
புரண்டு படுக்கிறேன்...

ஓ…அவ்வளவும் கனவா ?????
கனவினிலே என்றாலும்                                                         
சுவை தரத்தோன்றியதே.....
இறைவா உனக்கு நன்றி...

---கீர்த்தனா ---

No comments:

Post a Comment