Friday 8 June 2012

இன்பத்தமிழ்

செந்தமிழ்த்தேன்சுவைக்கு
தீராத அடிமை நான்…
சுவைக்கிறேன் சுவைக்கிறேன்
தாகமதும் அடங்கவில்லை
போதையதும் தீரவில்லை…

அழகுத்தமிழ்க் கவிகளினை
கண்களினால் பருகும் தருணம்…
சிந்தையெலாம் சிலிர்க்கிறது…
மனப்பறவை வானமதில்
இறக்கை கட்டிப் பறக்கிறது…

என்சொல்வேன்…தமிழ்.. தமிழ்..
இன்பத்தமிழ் பேச்சினிலும் மூச்சினிலும்
ஒன்றாகச் சங்கமம்…

---கீர்த்தனா---

No comments:

Post a Comment