Monday 25 June 2012

படைத்தல் வித்தை......

படைத்தவனுக்கே
படைத்தல்
வித்தை காட்டும்
அறிவியலாளர்களே…

அழிவுக்குண்டான
படைத்தலைத்தவிர்த்து
ஆக்கத்துக்கும்
வழி செய்யுங்கள்…

படைத்தற்கடவுளரான
உங்களிடம்…
இன்னுமொரு யாசகம்…

ஆராய்ச்சி பண்ணுங்கள்
மனநிம்மதிக்கு மருந்து
உண்டோவென…

வாழும் காலத்திலே
கொஞ்சம் நிம்மதியாக
வாழ்ந்து விட்டுப்
போகின்றோம்…

-------கீர்த்தனா-------

2 comments:

  1. நாம் வாழும் காலத்தில் கொஞ்சம் நின்மதியாக வாழ்ந்து விட்டுப்போக மருந்தொன்றை கேட்கும் உங்கள் வரிகள் இதயத்தை தொடுகிறது!.. ஆழ்ந்து சிந்திக்கவும் வைக்கிறது!.. இன்னும் தொடருங்கள் தங்கச்சி!..

    ReplyDelete
  2. NICHCHAYAMA ANNAA...NANDRIKAL....

    ReplyDelete