Friday 8 June 2012

வசந்தகாலம்...

தென்றற்காற்றின்
செல்லத்தழுவலில்
மெலிதாக அசையும்
வண்ணமலர்களின்
வெட்கச்சிரிப்பழகும்

«கீச்சு கீச்சு» ஒலியில்
பறவைகள் பேசும்
கிள்ளைமொழியழகும்…
வானமகளின்
கண்ணாடி பிம்பமாய்
நீலப்பளிங்காய் மின்னும்
நீர்நிலைகளினழகும்…

அந்த அழகினிலே
சொக்கி நீரைத்
தொட்டுப்பார்க்கும்
சினனஞ்ச்சிறு
வண்ணப்பறவைகளின்
சிங்காரப்பேரழகும்…

மரகதப்புடவையில்
மேனிமறைத்த
நிலமங்கையின்
கண்கவர் வனப்பும்….
இன்னும்...இன்னும்…
எதைச்சொல்வேன்
வார்த்தைகள் இல்லை..
வசந்தகாலம்
வரைந்து வைத்த
வண்ணக்கோலங்கள் …

-------கீர்த்தனா---------

No comments:

Post a Comment