Friday 8 June 2012

செந்தமிழின் இன்பெருமை…

நாவினிக்கப்
பாடுகின்றேன்
செந்தமிழின்
இன்பெருமை…

பாவேந்தர்கள்
பாடி வைத்த
நன்முத்துச்
சொற்களினால்…

பாடப்பாடச்
சுவைக்கிறது
கேட்க கேட்க
இனிக்கிறது…

என்றுமதன்
இன்சுவையும்
குறைந்ததாய்த்
தெரியவில்லை…

தீந்தமிழ்ச்சொல்
முத்தெடுத்து
கோர்க்கக்கோர்க்க...
அழகழகாய்க்
கவிமாலை
பலகோடி…
ஒவ்வொன்றும்
புதுப்புதுபொலிவுடனே…

-------கீர்த்தனா--------

No comments:

Post a Comment