Friday 8 June 2012

நெற்றிக்கண்ணைத் திறந்திடினும்...

தாயன்பு அறியாதே
குழந்தைப் பிஞ்சுகள்
வெதும்பித் தவித்து
உணர்வுகள் சிதைத்து
வாழும் கொடுமை…

அநாதையென்னும்
ஒற்றைச் சொல்லால்
உணர்வை கொன்றவனே
இறைவன் என்பவனே...

அவர்தம் வலியுணர்ந்து
வருந்தும் மனிதன்
உனை விட
உயர்ந்தவனோ?

தாயன்பைப்பறித்தவனே
எந்தன் பார்வைதனில்
என்றும் நீ கொடியவனே..

தவறாயின் மன்னித்திடு
இறைவா….. ஏனெனில்
வலிகள் கண்டால்
துடித்தெழும்
ரௌத்திரக்காரி நான்..

உன்னையும்
கேள்வி கேட்பேன்.
நெற்றிக்கண்ணைத்
திறந்திடினும்
குற்றம் குற்றமேயென
அறிந்தவன் நீதானே…

-------கீர்த்தனா-------

No comments:

Post a Comment