Friday 8 June 2012

காதல்மாயை

உந்தன் மேல்
நான் கொண்ட
காதல்மாயை...

எனதொவ்வொரு
துடிப்பையும்
உணர்ந்து
உயிராய்
நினைந்து...
தன்னுயிர் தந்து
காத்து வளர்த்த
பெற்றோரின்
நினைவைக்கூட
புறந்தள்ளியதே...

இறுதியில்
நீயெனைப்
புறந்தள்ளிய
பொழுதினில்
தாயின் மடியும்
தந்தையின்
அரவணைப்பும்
மனவலிக்கு
மருந்தாயின...

பெற்றவரன்பே...
நிரந்தரமென்பதை
உணரவைத்தவனே
அதற்காகவெனினும்
உனக்கொரு நன்றி...

-------கீர்த்தனா--------

 

No comments:

Post a Comment