Friday 8 June 2012

மயிலிறகாய் நீவேண்டும்...

துடித்தேன்
துடித்தேன்
தூண்டிலில்
சிக்கியமீனாய்…

அன்று இதயமதை
இனிக்க இனிக்க
துடிக்க வைத்ததும்
நீதான் …

இதோ இன்று
வலிக்க வலிக்க
துடிக்க வைப்பதும்
நீதான் …

மயிலிறகாய்
நீவேண்டும்
காயம் தடவி
வலிதனைத்
தீர்ப்பதற்கு…

---------கீர்த்தனா---------

No comments:

Post a Comment