Thursday 28 June 2012

காணாமற் தான் போனேன்...

பொங்கும்
கடல் அலைகள்
ஆர்ப்பரித்து 
எழுவதைப்போல்…

உன் நினைவுகளின்
ஆர்ப்பரிப்பினில்…
மூழ்கித்தான்
போகின்றேன்…

ஆழ்கடலின்
ஆழத்துள்...
அடித்துச்
செல்லப்படும்
சிறுதுரும்பாய்...
காணாமற் தான்
போனேன்
நான்…

-------கீர்த்தனா-------

2 comments:

  1. ஆழ் கடலின் ஆழத்தில்..
    நீ காணாமல் போனாலும்..
    புரண்டு வரும்..
    மறு அலையில்...
    மீண்டும் திரண்டு வருவாயோ..
    இங்கு..
    ஒரு புதுக் கவிதை..
    நீ வ‌டிக்க!!..

    ReplyDelete