Friday 8 June 2012

உன் கடமையது தீர்ந்ததோ சொல்?

சருகாய்
நினைந்து
முதியோர்
மனம் வருத்தி
இல்லத்தில்
விடுத்து
வருடமொரு
நாளில்...
எட்டிப்பார்ப்பதால்..
உன் கடமையது
தீர்ந்ததோ சொல்?

உனதொருநாள்
வரவிற்காய்...
ஒவ்வொரு
நொடியும்
உயிர் துடித்து...
ஏக்கத்துடன்
 இருகண்கள்
வாசற்கதவை
நோக்கியபடியே..

உனக்கும்
ஒருநாள்
முதுமையும்
வலிகளும்
காத்திருப்பதை
எப்போதுதான்
நீயுணர்வாய்….

-------கீர்த்தனா-------

1 comment: