Friday 8 June 2012

இரக்கமற்ற மனிதர் கூட்டம்…

கடவுளையும்
சொந்தம் கொண்டாடும்…
இரக்கமற்ற
மனிதர் கூட்டம்…
உள்ளே போய்க்கும்பிட
அனுமதியில்லையாம்
கோவிலிலே…

ஏனெனிற்தாழ்ந்த
ஜாதியாம் நீயிங்கு
எல்லாமக்களும்
நம்மக்களே நன்மக்களே...

எலும்பும் சதையும்,
நரம்பும் இரத்தமும்
தங்கத்தினால்…
வார்க்கப் பட்டதோ
உயர் ஜாதியென்று
பறைசாற்றுவோர்க்கு...

வெட்கப்படுகின்றேன்
வேதனைப்படுகின்றேன்
மனிதருக்கான
ஆறாமறிவு
வீணாக்கப்படுவதை
நினைந்தே….

--------கீர்த்தனா---------

No comments:

Post a Comment