Thursday 14 June 2012

ஈழத்தின் விதை


கண்களில்
ஏக்கம்...
அமைதி
இழந்த
நெஞ்சம்...
காற்றை
வெறித்து
ஓர் பார்வை...
சுதந்திரமில்லா
சுவாசக்காற்று...

மரணித்த
உறவுகளின்
வேதனை...
அடிக்கடி
வெளிப்படும்
பெருமூச்சு...
கத்தியால்
கண்டபடி
கீறும் வலி...
அத்தனை
வலி இருந்தும்
வயிற்றை
கிள்ளும் பசி...

வேலையில்லாக்
கொடுமை...
ஒதுக்கி
வைக்கும்
என் இனம்...
இருந்தும்
இன்னும்
வாழ்கிறேன்...
ஓர் நடைப்
பிணமாய்...

-----கீர்த்தனா​----



No comments:

Post a Comment