Sunday 30 September 2012

ஏழ்வகை வண்ணம்...

இடித்தேவன் மத்தளம் வாசிக்க...
மின்னலவன் புகைப்படம் பிடிக்க...
இறங்கினாள் மழைத்தேவதை
வானிலிருந்தே...!

தேவதையின் பேரழகில்
சொக்கிப்போய்...ஒளிந்திருந்
கதிரவனோ...மெதுவாக எட்டிப்பார்த்து...
மோகமாய்ப் புன்னகைத்தான்...!

மன்னவன் பார்வைக்கணை தாங்காது...
நாணம் கொண்ட மழைமகளோ...
வானவில்லாய் வளைந்து
ஏழ்வகை வண்ணம் காட்டி...
சிருங்காரமாய்ப் புன்னகைத்து...
குளிர்வித்தாள் காதலனை...!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment