Sunday 30 September 2012

புரியாத பந்தங்கள்...!

முரண்களின் சொந்தங்கள்
புரியாத பந்தங்கள்...!
புரிந்து கொள்ள முயற்சி செய்தும்
புரியாத தொடர் நிலைகள்...!

யார் மனதை யார் அறிவார்..
உன் மனதை நீ அறிவாய்...!
என் மனதை நான் அறிவேன்...!
எண்ணமெலாம் பேரன்பு...
அது தவிர வேறில்லை...!
புரிய வைக்கத் தெரியாமல்
புழுங்கியே தவிப்புகள்...!

அன்பின் மிகுதியிலே...
உரிமையான சாடல்கள்...!
உளம் புரிவாய் எனும்
நம்பிக்கையில்....
கள்ளமில்லாக் கோபங்கள்...!

உனக்கான என்னன்பில்...
துளி கூட விஷமில்லை...!
உன் அரவணைப்பில்லா
இவ்வுலகில்...வாழவே
பிடிக்கவில்லை...!
உன்னன்புக்காய் ஏங்கும்
உயிர்த்துடிப்பு..
ஓய்வில்லாமல் தவிக்கறது...!

----கீர்த்தனா----

No comments:

Post a Comment