Friday 7 September 2012

கண்ணனவன் குழலின் இசை


காற்றின் ஒலியினிலே
தவழ்ந்து வந்த…
கண்ணனவன் குழலின் இசை…
காதலோடு காதினையே…
இனிதாக நனைத்திடவே…
மெய்மறந்த ராதையவள்,
கண்கள் சொக்கியே…
கசிந்துருகிக் காதல் கொண்டு…
பரவசம் எய்தினாள்
காதலின் உச்சத்தில்…
உயிரன்பின் தழுவலில்...!
----கீர்த்தனா----

No comments:

Post a Comment