Sunday 30 September 2012

ஜீவனும் தேய்ந்திடும்.....


ஜீவனும் தேய்ந்திடும்
ஒரு நொடிப் பிரிவினில்...
என்ன சொந்தமோ
புரியவுமில்லை...
இப்படி என்னுயிர்
துடித்ததும் இல்லை...

உள்ளகத்து சுகமோ..துக்கமோ
உன்னிடம் பகிர்கையில்
இனம் புரியா ஒரு நிறைவு...
அடி நெஞ்சில் சுள்ளென
துன்பத்தின் கீறலாய்...
வலியின் சுவடுகள்...
உனதொரு சிறு முகச்சுழிப்பில்...!

வலியின் வடிவம் விளக்கும்
வார்த்தைக்காய்…
தேடலுடன் பெரும் துயரம்
எப்போதும் எண்ணங்களில்…!
வாழ்வின் வழியெல்லாம்…
உணர்வுப் பகிரல்களின்
உறவாய் நீ வேண்டும்!
உள்ளன்பின் உண்மைத் தழுவலுடன்...
எனக்கான என் உறவாய்….!

----கீர்த்தனா----

No comments:

Post a Comment