Sunday 30 September 2012

இயற்கையில் இன்பம்...


எண்ணங்களின் சுமையுடன்
நிம்மதி தேடி
கடற்கரை மணலிலே...!

அலைகளின் பொங்கலில்
சுமைகள் கரைந்திட
இலவம் பஞ்சாய்ப்
பறந்த மனம்...!

கண்களை நிரப்பிய
இயற்கை அன்னையின்
தெய்வீக தரிசனம்...!

தத்துவம் சொல்லித்தந்தன
அலைகள்...ஓயாதே ஓடு..
தேடல்களுடன் என...!

இயற்கை அன்னை
சொல்லித் தந்தாள்..
திரும்பி வரா
வாழ்க்கையை
இரசித்துச் செல் என...!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment