Sunday 30 September 2012

இலவச இன்பம்…!

வானம் சிருஷ்டிக்கும்
கணப்பொழுதில்
ஓர் அழகிய நீர்வீழ்ச்சி…
கண்டேன் அதன்
அழகிய ஓட்டம்
சாளரக் கண்ணாடிச்
சரிவினிலே…!

கொட்டும் சாரலின்
கொள்ளை அழகினில்…
குழந்தையாய் மாறித்
துள்ளும் மனம்…!
எனக்கே எனக்காய்
ஆண்டவன் கொடுத்த
இலவச இன்பம்…!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment