Friday 7 September 2012

பனி பொழியும் நாட்டினிலே…!

தாயின் மடியிலிருந்து
வேருடன் பெயர்த்து
வீசி எறியப்பட்டு…
வந்து வீழ்ந்தோம்

பனி பொழியும் நாட்டினிலே…!

கனவினில் மட்டும்…
தாய் மடித்தூக்கம்…!
அலைபேசியினில் மட்டும்…
தந்தையின் உச்சி முகர்தல்…!
காற்றின் வழி மட்டும்…
உறவினர் உரையாடல்…!

தாய் தந்தை
ஸ்பரிசமின்றி…
உடன்பிறந்தோர்
அரவணைப்பின்றி…
பனியுடன் பனியாய்…
உணர்வுகளும்
உறைந்து போய்…
வெறும் ஜடமாக
நாமும் செல்கிறோம்…
வாழ்க்கையின் ஓட்டத்திலே…!

----கீர்த்தனா----

No comments:

Post a Comment