Sunday 30 September 2012

தாமரை நெஞ்சம்...

செந்தாமரைப் பெண்ணே...!
செங்கதிரோன் செவ்வொளி
வீசி வருவான்...கூம்பாதே..!
அழகல்ல உன் அழகுத்
திருமுகம் வாடுதல்...!
உன் காதலன்....
பட்டொளித் தழுவலில்...
நாணச்சிவப்பினில்...
நீ மலரும் அழகே அழகு...
ஒளி வீசித் தெறிக்கும்
செம்மை அழகு...!

வாடுதலின் பின்...
கூடுதல் ஓரின்பம்...
வார்த்தைகளில்
சொல்லொணாப் பேரின்பம்...!
ஒளித்தலைவன்
முகத்தினை மட்டும்
நோக்கியே தவமிருக்கும்...
உன் பெருமை மிகு காதலைப்
போற்றுகின்றேன்...!
காதல்மிகு செம்மலரே...
காவியமாய் நீ வாழ்க...!

----கீர்த்தனா----

No comments:

Post a Comment