Sunday 30 September 2012

பூமனதின் இறப்பு…

அம்பு தைத்த சிறகுகள்
இரத்தச் சொட்டுடன் ரணமாய்…!
அடிபட்ட பறவையின்…
ஊமை வலி,
ஊசிக்குத்தல்களாய்…!

உணரும் நாளில்
எழமுடியாமல்….
சிறகொடிந்து ,உருக்குலைந்து
உருவம் இழந்தது...!

உண்மையின் தரிசனம்
தூங்குவதில்லை...!
உன்னதத்தின் உத்தமம்
நெஞ்சினில் குறையவில்லை...!

புரிந்து கொள்ளும் நாளில்…
பூமனதின் இறப்பு,..
கல்லறையில் தூங்கும்...!
உணரப்படும்…
அன்பின் பெருமை…!
என்றோ ஒருநாள்
பூஜிக்கப்படும்…!
அங்கே ஓரிடத்தில்…
நிச்சயமாய்...நிரந்தரமாய்...!

----கீர்த்தனா----

No comments:

Post a Comment