Sunday 30 September 2012

நட்சத்திரக் கூட்டங்களின் நடுவிலிருந்து….


சென்று விடுகிறேன்…
எங்கோ வெகு தூரமாய்….
அன்பினைக் கொடுத்தெடுத்த
உன்னன்புக்காய் ஏங்கி ஏங்கிப்
போராடிக்களைத்து…
உடலும் உள்ளமும்
சோர்ந்து தான் போயிற்று…!
இவ்வாழ்வின் எல்லை
ஒன்றே நிம்மதி…!

சென்று விடுவேன்
வெகுவிரைவில்…
நட்சத்திரக் கூட்டங்களின்
நடுவிலிருந்து
உன்னைத் தேடுவேன்…!
அடுத்தொரு பிறவி உண்டெனில்
எனக்காய் உனைத் தருவாய்
எனும் நம்பிக்கையில்...

----கீர்த்தனா----

No comments:

Post a Comment