Sunday 30 September 2012

ஊமையாய் ஓர் அழுகை…!

தன்மானம் சுடரிடும்
தணியாத தாகம்…!
விடுதலை வேண்டித்
தினம் ஏங்கும் நெஞ்சம்…!
தாயவள் துயர் கண்டு
ஊமையாய் ஓர் அழுகை…!

விடுதலைக்கனவுகள்
சிதைக்கப்பட்ட கொடுமை…
நெஞ்சந்தனிலே
நீங்காத சுமையாய்
அழுத்திக் கொல்லும்…
கொழுந்து விட்டெரியும்
சுதந்திர தாகம்…
பாவி மனதுள் புதைந்து…
கையாலாகாத்தனத்துடன்
நீறு பூத்த நெருப்பாய்…

ஈழத்தாயே மன்னித்துவிடு…!
ஈரமில்லா ஈனர்கள்
கையில் சிக்கி
நீ படும் வேதனையை…
வெந்த நெஞ்சத்துடன்
வேடிக்கை பார்க்கும்
உன் பாவி மகளை…!

***கீர்த்தனா***

No comments:

Post a Comment