Sunday 30 September 2012

சுமப்பேன் சிலுவையை...

வலிகள் நிறைந்த இதயங்கள்
வலிகள் நிறைந்த இதயங்களுடன்
மட்டும் தான் இணையுமோ
எப்போதுமே..............
சிரிக்கும் போது மட்டும்
உன் துணையாக அல்ல நான்
அழும் போது உன்னோடு
மனம் வெதும்பி சேர்ந்தழும்
உயிர்த்துணை நான்...
உன் துயர் கண்டால்
உணர்வுக்குவியலில்
பைத்தியம் ஆகிறேன்...
அதனால் அன்புள்ளங்களிடம்
பைத்தியம் போல் புலம்புகிறேன்..!

தோழமையே உனக்காக
என்னுயிர் துடிப்பது உண்மை..!
முகமூடி மனிதர்களில்
உண்மை முகம் பிரித்தறிய முடியா
வலியுடன்....உண்மை அன்பின்
ஊற்றுடன் அன்பினை வழங்குவேன்
வற்றாமல் ஜீவநதியாய்...என்
இனியதோழமைகள் அனைவருக்குமாய்...!
வலிக்க வைப்போர் வலிக்க வைக்கட்டும்
சிலுவை சுமந்த இயேசுவின் பெருமை
என்றோ மனிதர் உணர்ந்தனர் அன்றோ...
சுமப்பேன் சிலுவையை அன்பின் உச்சமாய்
நான் அன்புக்கு அரசி...!

----கீர்த்தனா----

No comments:

Post a Comment