Friday 7 September 2012

பெரும் பயணம்...

வினாக்குறிகள்
நிரப்பித் தொடரும்…
சஞ்சலங்கள் நிறை வாழ்வில்…
விடையில்லாப்
பகுதிகள் ஏராளம்…!

விடியலின் பொழுதுகளில்…
தினந்தோறும் தேடலுடன்
சளைக்காமலே…
திசை தெரியா ஓட்டம்…!

எதுவரை எல்லை
எதுவும் புரியாமலே…
விதியின் தலையில்
பழி சுமத்தி…
முடிவில்லாத் தேடலுடன்
பெரும் பயணம்...!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment