Sunday 30 September 2012

கவிதை சிறகு விரித்து...


கவிதைகள் பிறக்கும்
அதிகாலை நேரத்தை
மிகவும் இரசிக்கிறேன்...!
எட்டிப்பிடிக்க முடியா
கனவுலகெல்லாம்
கவிதை சிறகு விரித்து...

ஆங்காங்கே
பறந்து பறந்து....
உணர்ந்து கரைந்து....
இசையின் மீட்டல்களுடன்...
எனக்கே எனக்கான
தனியுலகில்
நான் மட்டும்...
தேவதையாய்...
இறக்கைகளுடன்
காற்றுடன் காற்றாய்....
மிதக்கின்றேன்....

----கீர்த்தனா----

No comments:

Post a Comment