Sunday 30 September 2012

சிறை வைப்பேன் விழிப்பாவையுள்…


விழிகளுக்குள்ளே விருட்சமாய்
என்னவன் வியாபகம்...!
இமைகளை மூடியே...அவன்
அன்பினை..இரசிக்கிறேன்...!
பஞ்சுப் பொதிகளாய்…
இனிமை நினைவுகள்
விழி வானில் மிதந்திட...
திறந்திட விரும்பவில்லை
இமைக் கதவுகளை...!
கண்ணல்ல என்னவன் என்
கண்களுக்குள் கண் அவன்...!
சிறை வைப்பேன்..
விழிப்பாவையுள்...
ஆயுளின் இறுதி வரை...!

****கீர்த்தனா****

No comments:

Post a Comment