Sunday 30 September 2012

உனதழகு மனதின் ஆழத்துள்…..

குறையொன்றும்
பெரிதில்லை…
நீ மட்டும் போதுமென…
உன்வாய் மலர்வுப்பூக்கள்
உதிர்ந்த அக்கணம்…!
உனதழகு மனதின்
ஆழத்துள் வீழ்ந்து….
சிறைப்பட்டேன் நான்….
சிறை மீளும் ஆசையின்றி…!
காதலின் காதலனே
அன்புருவின் நாயகனே…
நீ மட்டும் போதுமெனக்கு
வாழ்வின் உச்சம் தொட…!

குறை தன்னை
பெரிதாய் நினைந்து….
நத்தையாய் சுருளும்
என் மனம்…. இன்று
தன்னம்பிக்கையுடன்
தெளிவாய்…..
நன்றி சொல்ல
வார்த்தையின்றி…
அன்புமலர்
பூஜை செய்தே…
உள்ளம் உருகினேன்…!

----கீர்த்தனா----

No comments:

Post a Comment