Friday 7 September 2012

நிலையில்லா வாழ்க்கைக்காய்…


மாயையின் உருவங்கள்
நான் என்பதும்
நீயென்பதும்…!!
தொலையப்போகும்
ஆன்மாக்காய்…
துன்பங்கள் பல சுமந்து
உழல்கின்றோம்….

நிலையில்லா
வாழ்க்கைக்காய்…
நிலைக்குமெனும்
நம்பிக்கையில்…
பயணங்கள்….
முடிவேயில்லாமல்…!!

அளவோடு செல்வம்…
அன்போடு பகிர்தல்…
உணர்வோடு மனிதம்…
கரை காணாக்காதல்…
கருத்துள்ள நட்பு…
இவை போதும் வாழும்
வரை நிம்மதிக்கு...!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment