Sunday 30 September 2012

அமரகவிக்கு சமர்ப்பணம்…

ஜகத்தினில் பிறந்தான்
புதுமை படைக்க…!
தமிழ் பா தந்தான்
சுவைத்து இரசிக்க…!
காதலும் சொன்னான்
இனிக்க இனிக்க…!

ரௌத்திரம் கொண்டான்
தவறுகள் எரிக்க…!
வீறு கொண்டெழுந்தான்
வீணர்களை அழிக்க…!
தன்னம்பிக்கை தந்தான்
நீயே தான் தெய்வமென…!

சாதியம் வென்றான்
சாக்கடை மனங்களில்…!
வீரம் அள்ளிக்கொடுத்தான்
மென் உணர்வுப் பெண்மைக்கு…!
ஈடுமில்லை இணையுமில்லை…
அன்புக்கவிஞன் பெருமைக்கு...!
உணர்சிக்கவிஞனைப்
படைத்தேன் எனப்
பெருமை கொண்டான்
பிரம்மதேவனும்…!
நம் மண்ணில்...
அவன் ஜனிக்க...
மாதவம் செய்தோம்
நாமும்…!

----கீர்த்தனா----

No comments:

Post a Comment