Sunday 30 September 2012

காற்றினிலே ஒரு சேதி...

காற்றினிலே ஒரு சேதி...
தூதாக அனுப்புகிறேன்...!
கானலல்ல என் நட்பு
காவியம் என்று சொல்லு...!

உண்மை நட்பின் உதாசீனம்
உயிரை சிறுகக் குடிக்குமென்னும்
உளவியல் உணர்வுகளை
கொஞ்சம் நீயும் எடுத்து சொல்லு...!

நம்பிக்கை பொய்க்கவில்லை
நன்மதிப்பும் போகவில்லை
அலட்சியம் தாங்கவில்லை...
எனும் உண்மை நீயுமங்கே...
உணர்வோடு போய் சொல்லு...!

உருகுவது வெறும் நட்பல்ல...
உன்னுயிர் நட்பென்று...
உறுதியோடு எடுத்து சொல்லு...!

உடைந்து விடும் கண்ணாடி...
பல பிம்பம் காட்டுதற் போல்...
உன் பிம்பம் மட்டும் இங்கே...
எனைச் சுற்றி நிற்கும் உண்மை
கண்ணீர் கலந்து நீயும்...
உணர்வோடு எடுத்து சொல்லு...!

பிரிவின் அழுத்தத்திலே...
சிறு நெஞ்சு சிதறுமுன்னே
விரைவாக ஓடி வந்து...
நட்புக்கரம் பற்றச் சொல்லு...!

----கீர்த்தனா----

No comments:

Post a Comment