Sunday 30 September 2012

காதற்பனித்துளி....

அன்றொருநாள்
உள்ளே விழுந்த
பனித்துளியாய் காதல்...!
இனிப்பாய்...
நெஞ்சம் மலர்ந்திட...
பறந்தது மனப்பறவை
சுகராகமிசைத்து...
வான் வெளியின்
மடியினிலே...!

கண்களின் இமைக்குள்...
கனவுகள் மிதந்தது...!
தேவகானமாய்...
இசையின் மீட்டல்கள்...
நெஞ்சை நிறைக்க
விரிந்தது அழகாய்...
காதல் பூ...
மணம் வீசி
மலர்ச்சியுடன்...!

மலர்ந்த பூ
வாடி விடாமல்
நீரூற்றும்
கைகளைத் தேடியே...
தவிப்பாய் தவமிருக்கும்
தனிமைப் பூ...!

-----கீர்த்தனா----

No comments:

Post a Comment