Sunday 30 September 2012

நினைவுகளின் எச்சங்களுடன்...!

நெஞ்சமெனும் ஆலயத்தில்…
நினைவுகளால் கோவில் கட்டி…
நித்தம் உனைப் பூஜித்தேன்…!
கோவிலுள் கருவறையில்…
நீக்கமற நீ மட்டும்….
நிறைவாக நிறைந்திருக்க …
என்ன எண்ணிப் பழகினையோ
என்னவனே நானறியேன் …!

எண்ணமெல்லாம்
சிதைத்த பின்னே…
மௌனமாய் நீ செல்ல…
மௌனமொழி அறியாது
மருகிப்போய் நானுமிங்கே …
ஏங்கி நின்றேன்
வழிமேல் விழி வைத்து…
நினைவுகளின் எச்சங்களுடன்...!

---கீர்த்தனா----

No comments:

Post a Comment