Sunday 30 September 2012

ஓயாத அலைகள்….


கடற்கரையோரம்…
கண்ணிமைக்காமல் நான்…!
கரைக்காதலனைத் தேடிச்
சளைக்காமல்
அலை மகளின் ஓட்டம்…!

முத்தமிடல் தவிர…
இணையும் வழி
இல்லையென
அறிந்தும்...விடா
முயற்சியுடன்…
கரைகாணாக்
காதலுடன்
ஓயாமல்……...

இன்று போய் நாளையும்…
இன்று போய் நாளையும்…
உயிர்ப்பித்த காதலுடன்...!
நெஞ்சுருகி பார்த்து நின்றேன்…
மரிக்காத காதலின்
உயிர்த் துடிப்புடன்
உலகம் இயங்குவதை…!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment