Sunday 30 September 2012

தண்ணிலவுக் காலம்..


மின்னற்பார்வையின்
தீண்டலில்…
நானும் நீயும்
நாமாகிய அதிசயம்..!

நீச்சல் தெரியாமலே
நீந்தலும்…!
இறக்கையில்லாமலே
பறத்தலும்…!
தேன் பருகாமலே
உன்மத்தமும்…!
புன்னகைக்க நினைக்காமலே
உதட்டில் விரியும் புன்னகையும்...!

இனியதொரு புதுவுலகில்…
நானும் நீயும்,
நம் உணர்வுகளும் மட்டுமே
சஞ்சரிக்கும்…
அழகிய தண்ணிலவுக் காலம்…!
வாழ்வின் இனிய தேன்சொட்டுக்களின்
சுவையுடனே...
உள்ளம் துள்ள, இனிமை பொங்க,
நாம் மட்டுமே...!
 
---கீர்த்தனா---


No comments:

Post a Comment