Thursday 4 October 2012

விழிவாசல் திறந்து வைத்தே...

ஒருமுறை பறக்க வைத்தாய்...
மறுமுறை தவிக்க வைத்தாய்...
எதுவரை உன்னுள்ளே நான்?

உதடுவரை உள்ளேனோ ?

உயிர்வரை உள்ளேனோ?
உணர முடியாது தினம் தவித்து...
உளநிலை வலியெடுத்து...
தனிமையில் தவமிருக்கும்...
கால் கடுத்த தனிக்கொக்காய்...
மனம் கனக்க நானுமிங்கே...
நிலை தளும்பி நிற்கின்றேன்..!

மனமறிய வைத்துவிடு...
வலுவிழந்து போகுமுன்னே ...!
கரையுடைக்கக்  காத்திருக்கும்...
அணைக்கட்டாய் விழியோரம்...!
பொங்கி அணையுடைக்க...
துடித்திடும் இந்நொடியில்...
நீ வருவாயெனும் ஏக்கத்துடன்...
எனை மறந்தாயோ எனும் தவிப்புடன்...
விழிவாசல் திறந்து வைத்தே...
ஏக்கத்துடன் காத்திருப்பு...!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment