Wednesday 10 October 2012

பறக்கும் நெஞ்சம்...!

நீரின் அலைகள்
விரியும் அழகில்…
மீன்கள் சுழித்து
நீந்தும் அழகில்…
முகை வெடித்துச்சிரிக்கும் 
பூவின் அழகில்…
பனித்துளி சிலிர்க்கும்
புல்நுனி அழகில்…
வானம் கொட்டும்
மழைத்துளி அழகில்…
மழலைகள் விரிக்கும்
பூஞ்சிரிப்பழகில்...
இலவம் பஞ்சாய்ப்
பறக்கும் நெஞ்சம்...!

 ---கீர்த்தனா----

 

 

 

No comments:

Post a Comment