Friday 26 October 2012

இத்தனை விந்தைகளா?



நேர் கொண்ட கண்களின்
கூர்ப்பார்வை தன்னிலே...
இழந்தேன் என் மனதை
முழுதாய் உன்னிடம் நான்...!

சிறகடிக்கும் நெஞ்சினுள்ளே...
சிருங்கார லகரி ராகம்
இனிதாக மனம் மயக்க...
வான் வெளியில் என் பயணம்...!

ஒற்றைப் பார்வை வீச்சினுள்
இத்தனை விந்தைகளா?
பார்த்து விட்டு நீ சென்றாய்...
திருட்டுக் கொடுத்து விட்டு
நான் நின்றேன்...!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment