Tuesday 9 October 2012

நீங்கும் காலம்….!

பழையவை கழிதல்
பழமொழி இங்கே….
நட்பினில் மட்டும்…
வேண்டவே வேண்டாம்…!
புதியன புகுதல்
ஒரு வகை இனிமை…
பழையன கழிதல்
மிக மிகக் கொடுமை...
பூக்களாய் மனதில்
தோன்றிய நட்பு….
வாட்களாய் மனதினை
அறுத்திட வேண்டாம்…!

திகட்டக் கொடுக்கும்
அன்பும் ஒரு நாள்….
நமக்குரியோரைத்
தூர நிறுத்தும்…!
கற்பது புதிய பாடங்கள்
எனினும்… முகவரி தொலையும்
வலியுடன் விரைவில்…
முகவுலகம் விட்டு
நீங்கும் காலம்….!

நெருஞ்சி முட்கள்
நெஞ்சினுள் தைக்கும்…
வலிகளின் மனது….!
அலட்சியம் காட்டும் உயிர் நட்பு
மலர் போல் மனதை….
அணுவாய்க் கொல்லும்….!
துன்பம் இங்கே தங்கட்டும்…!
இன்பம் அங்கே பொங்கட்டும்…!

---கீர்த்தனா---


 

No comments:

Post a Comment